×

இங்கிலாந்திடம் இருந்து சத்ரபதி சிவாஜியின் வாளை மீட்க முயற்சி

மும்பை: சத்ரபதி சிவாஜியின் வாளை இங்கிலாந்திடம் இருந்து மீட்க முயற்சிப்பதாக மகாராஷ்டிரா கலாச்சார விவகார துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய மகாராஷ்டிரா அமைச்சர் சுதிர் முங்கந்திவார் கூறுகையில், சத்ரபதி சிவாஜி அரியணை ஏறிய 350வது ஆண்டு விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. சிவாஜி பயன்படுத்திய ஜகதாம்பா வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ளது. இதை மீட்க இங்கிலாந்து அரசிடம் பேச்சுவார்த்தை நடநத்தி வருகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நான் அடுத்த மாதம் இங்கிலாந்து செல்ல உள்ளேன் என்றார்.

The post இங்கிலாந்திடம் இருந்து சத்ரபதி சிவாஜியின் வாளை மீட்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chhatrapati Shivaji ,England ,Mumbai ,Maharashtra ,Cultural Affairs Minister ,Sudhir Mungantiwar ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...